/* */

தி.மலை கோட்ட தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம்

பொன்மகன் சேமிப்பு கணக்கு மற்றும் செல்வமகள் பொது வைப்பு நிதி தொடங்க வரும் செப். 27ம் தேதி முதல் அக்.21 ம் தேதி வரை சிறப்பு முகாம்.

HIGHLIGHTS

தி.மலை கோட்ட தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

பொன்மகன் சேமிப்பு கணக்கு மற்றும் செல்வமகள் பொது வைப்பு நிதி தொடங்க வரும் திங்கட்கிழமை 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 21ம் தேதி வரை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்ச வைப்பு நிதியாக ரூபாய் 250 செலுத்தி செல்வமகள் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். பெண் குழந்தையின் மேல்படிப்பு, திருமணம் போன்ற தேவைகளுக்கு இத்திட்டத்தில் சேமிக்க முடியும்.

அதேபோல் ஆண் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 500 செலுத்தி பொன்மகன் சிறப்பு சேமிப்பு கணக்கை தொடங்கலாம். பொருளாதாரத்தில் பின் தங்கிய 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இத்திட்டத்தில் சேர்க்க சமூக ஆர்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவி செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Sep 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!