/* */

திருவண்ணாமலை: அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலையில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 54), தொழிலாளி. இவர், கொளக்குடி கிராமத்திற்கு செல்வதற்காக திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் கொளக்குடிக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறியுள்ளார். இதனையடு்த்து அவர் பயணச்சீட்டு கேட்டதற்கு கொளக்குடியில் பஸ் நிற்காது என கூறிய கண்டக்டர், திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகில் இறங்கி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. திருவள்ளுவர் சிலை அருகில் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் இருந்து இறங்கும் போது, டிரைவர் அவரை கவனிக்காமல் பஸ்சை இயக்கியதாக தெரிகிறது. இதனால் பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஏழுமலை 15 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழ ந்தார். இதுகுறித்து ஏழுமலையின் மனைவி கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 May 2022 7:55 AM GMT

Related News