Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை: நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
HIGHLIGHTS
தண்டராம்பட்டு அருகில் உள்ள ராயண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று அவரது நண்பருடன் தானிப்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு இருச்சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்குவதற்காக காரில் வந்து உள்ளார்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் பஸ் நிறுத்தம் அருகில் காரை நிறுத்தி விட்டு பேட்டரி வாங்க கடைக்கு சென்று உள்ளார். சற்று நேரத்தில் காரின் முன்பக்கத்தில் உள்ள என்ஜீன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்து உள்ளது. அடுத்த வினாடியே கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.