Begin typing your search above and press return to search.
ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு
பழங்குடியின மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் ஆட்சியரிடம் மனு
HIGHLIGHTS
தண்டராம்பட்டு அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணவி ரோகினி உள்ளிட்ட மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், 'மலைவாழ் சமூகத்தை சேர்ந்த நாங்கள், மலையாளி பழங்குடியினர் (எஸ்டி) சமூகத்தில் உள்ளோம். எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால், கல்வியை தொடர முடியவில்லை. மேலும், கல்வி ஊக்கத் தொகையும் பெற முடியவில்லை. உயர் கல்வியை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்டி மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்கினால், உயர்கல்வி படிக்க வழி பிறக்கும். புளியம்பட்டு, அருவங்காடு, கல்நாத்தூர், புதூர்செக்கடி ஆகிய கிராமங்களில் ஜாதி சான்றிதழுக்காக 50-ம் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக்கின்றனர். எங்களுக்கு மலையாளி எஸ்டி என ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளனர்.