/* */

வினாத்தாள் கசிந்த விவகாரம்: 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

HIGHLIGHTS

வினாத்தாள் கசிந்த விவகாரம்: 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததைதையடுத்து, இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுகள் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வினாத்தாள்கள் வெளியாவதற்கு காரணமாக இருந்த போளூர், வந்தவாசி பகுதிகளை சேர்ந்த இரண்டு தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுத்துறை இயக்குனரின் வழிகாட்டுதலை பின்பற்றி அரசு அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே வெளியான அட்டவணையில் எவ்வித மாற்றமின்றி திருப்புதல் தேர்வு நடைபெறும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Feb 2022 12:59 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்