/* */

கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்; அமைச்சர் பேச்சு

கிராம சபை கூட்டங்களில் அனைத்து மக்களும் பங்கேற்று தங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

HIGHLIGHTS

கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்; அமைச்சர்  பேச்சு
X

பவித்ரம் கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். 

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பவித்திரம் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியார் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகள் உள்ளன. அனைத்து கிராமங்களும் வளர்ச்சி பெற்று தன்னிறைவு பெற்ற கிராமங்களை கொண்ட மாவட்டமாக திகழ வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி அனைத்து ஊராட்சிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

கிராமங்கள் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இனி வரும் காலங்களில் கிராம சபை கூட்டங்கள் ஆண்டுக்கு 6 முறை நடைபெறும் என முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். இவ்வாறு நடைபெறும் கூட்டங்களில் அனைத்து மக்களும் தவறாமல் பங்கேற்று, தங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என கூறினார்.

அதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் நிலைத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது. பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கிசான் அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) லட்சுமி நரசிம்மன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் ரமணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஞானசவுந்தரி மாரிமுத்து, ஆரஞ்சி ஆறுமுகம், பவித்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வேளாங்கண்ணி, திருவண்ணாமலை ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லட்சுமி, தி.மு.க. மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 April 2022 2:01 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?