/* */

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கைத்தறி தினவிழா

தேசிய கைத்தறி தினவிழாவில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கைத்தறி தினவிழா
X

கைத்தறி மற்றும் விற்பனை முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட  திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறிதுறை சார்பில் 8-வது தேசிய கைத்தறி தினவிழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்றது.

சிறப்பு கைத்தறி கண்காட்சியை கலெக்டர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் 20 நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் கடன் தொகையாகவும், 15 நெசவாளர்களுக்கு கைத்தறி குழுமத்தின் மூலம் தறி கூடங்களுக்காக ரூ.6 லட்சத்து 75 ஆயிரமும், 15 நெசவாளர்களுக்கு கைத்தறி குழுமத்தின் மூலம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்களும் என மொத்தம் ரூ.23 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை சரக உதவி இயக்குனர் இளங்கோவன், துறை அலுவலர்கள், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் மற்றும் நெசவாளர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Aug 2022 12:57 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?