Begin typing your search above and press return to search.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா
நாட்டுப்புறக் கலைஞர்கள், மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை வழங்கினார்
HIGHLIGHTS
தமிழ்நாடு நாடகம் மற்றும் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை மற்றும் நினைவு பரிசு வழங்கும் விழா இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட தலைவர் தி.பாரதி அனைவரையும் வரவேற்றார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, அடையாள அட்டை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்டத் தமிழ் சங்கத் தலைவர் சின்ராஜ், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் மற்றும் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டனர்.