/* */

தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: அமைச்சர் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலையில் தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் எ வ.வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
X

தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் எ வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி , மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Sep 2021 3:12 PM GMT

Related News