திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு
ரயில்வே நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் எவ்வித சிரமமும் இன்றி திருவண்ணாமலை நகரத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள டான்காப் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில், பத்து ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, இடம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: டான்காப் தொழிற்சாலை பகுதி முழுவதையும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இப்பகுதி ரயில்வே நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் எவ்வித சிரமமும் இன்றி திருவண்ணாமலை நகரத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். ஆகவே, இந்த இடம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் தொடர்பாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர், வருவாய் கோட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.