/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 717 மனுக்கள் பெறப்பட்டன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
X

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஊன்றுகோல், கண்ணாடி, ப்ரைலி கடிகாரம் ஆகியவற்றை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 717 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம் ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய 562 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து கூட்டத்தில் தொடர்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஊன்றுகோல், கண்ணாடி, ப்ரைலி கடிகாரம் ஆகியவற்றை ஆட்சியர் முருகேஷ் வழங்கினார். மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து பனிக்காலத்தில் மரணம் அடைந்தவரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் நிலையில் பணி நியமன ஆணையினை ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.

குறை தீர்நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வெங்கடேசன், செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமால் ,திருவண்ணாமலை ஆர்டிஓ மந்தாகினி, மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்யாறு

செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா்-ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.

இதில், சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து தர கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும், நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரியும், முதியோா் உதவித்தொகை, பெயா் திருத்தம், பட்டா ரத்து, இலவச வீடு, இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 89 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்களை பெற்று கொண்ட சாா் ஆட்சியர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் வழங்கினா். இதில் பட்டா மாற்றம், பட்டா ரத்து, இலவச வீட்டுமனைப் பட்டா, கணினி திருத்தம், பரப்பளவு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், கழிவு நீா் செல்ல வழி ஏற்படுத்தித் தருதல், பத்திரப் பதிவு ரத்து, ஊரக வேலைத் திட்ட அட்டை, ஆவண சரிபாா்ப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை பெற்று கொண்ட கோட்டாட்சியா் தனலட்சுமி, அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 28 March 2023 2:42 AM GMT

Related News