திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் மகளிர் போலீசார் பொன்விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் அலுவலகத்தில் நடந்த மகளிர் போலீசார் பொன்விழா கொண்டாட்டத்தில் டி.ஐ.ஜி. பங்கேற்று வாழ்த்தினார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் அலுவலகத்தில் நடந்த மகளிர் போலீசார் பொன்விழா கொண்டாட்டம் டி.ஐ.ஜி. பங்கேற்று வாழ்த்தினார்.
தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன் விழா கொண்டாடப்படுகிறது.
1973 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெண் போலீஸ் படைப்பிரிவு தொடங்கப்பட்டது ஒரு எஸ்ஐ 21 காவலர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிரிவு இன்று 35 ஆயிரத்து 329 பேருடன் பெரும் அளவில் வளர்ந்து நிற்கிறது தற்போது தமிழக பெண் போலீஸ் தொடங்கப்பட்ட பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் அலுவலகத்தில் நடந்த மகளிர் போலீசார் பொன்விழா கொண்டாட்டம் டி.ஐ.ஜி. தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்துகொண்டு மகளிர் போலீசாரை வாழ்த்தி பேசினார்.
விழாவில் ஆயுதப்படையில் பணியாற்றும் ரேஷ்மா என்பவர் கேக் வெட்டி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கினார். தொடர்ந்து விழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்களை டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார். இதில் திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பணிபுரியும் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களின் பரிந்துரையின் படி வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி முத்துசாமி அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி காவலர்களை வெகுவாக பாராட்டினார்.