/* */

நரிக்குறவர் சமுதாயத்திற்கு இலவச வீடுகள்: திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு

செங்கம் நரிக்குறவர் சமுதாயத்தவருக்கு கட்டப்பட்டு வரும் இலவச வீடுகளின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நரிக்குறவர் சமுதாயத்திற்கு இலவச வீடுகள்: திருவண்ணாமலை  ஆட்சியர் ஆய்வு
X

நரிக்குறவர் சமுதாயத்தவருக்கு கட்டப்பட்டு வரும் இலவச வீடுகளின் நிலை குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர் . அதில் 35 நபர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்ததாரர் வீடுகளை கட்டி முடிக்காமல் உள்ளார். அப்பகுதி மக்கள் வீடுகளை விரைவாக கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நரிக்குறவர் சமுதாயத்தவர் காலனியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வீடு கட்டும் பணி தாமதம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டார் தொடர்ந்து வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நரிக்குறவர் இன மக்கள் 35 வீடுகள் கட்ட அனுமதி அளித்தும் ஒப்பந்ததாரர் இதுவரையில் 12 வீடுகள் மட்டுமே ஓரளவு கட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

Updated On: 19 May 2022 1:38 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!