/* */

வெறையூர் அருகே டிராக்டர் மோதி தந்தை, மகன் உயிரிழப்பு

வெறையூர் அருகே டிராக்டர் மோதியதில் தந்தை மகன் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

வெறையூர் அருகே டிராக்டர் மோதி தந்தை, மகன் உயிரிழப்பு
X

பரிதாபமாக உயிரிழந்த முனியன் , செந்தூர்பாண்டியன்.

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் (வயது 35), தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (32), இவர்களுக்கு ஜெசிகா (14), என்ற மகளும், செந்தூர்பாண்டியன் (12), லோகேஸ்வரன் (9) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

ஜெசிகா வாழாவெட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பும், செந்தூர்பாண்டியன் டி.கல்லேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பும், லோகேஸ்வரன் 4-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்தநிலையில் காலை முனியன் மகன்கள் செந்தூர்பாண்டியன், லோகேஸ்வரன் ஆகியோரை அழைத்துக் கொண்டு அப்பகுதியிலுள்ள ஒரு பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது வாணாபுரம் பகுதியில் இருந்து வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கினர். இதில் முனியனும், செந்தூர்பாண்டியனும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த லோகேஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வெறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பேக்டர் தமிழரசு மற்றும் போலீசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அழகுராணி விசாரணை நடத்தி வருகிறார். தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 16 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்