Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப் ,வேளாண் இணை இயக்குனர் முருகன் ,திருவண்ணாமலை கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக புதன்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் அன்று ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக இன்று நடைபெற்றது.