/* */

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு

திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது

HIGHLIGHTS

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு
X

கலந்தாய்வு கூட்டத்தில்  வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்.

திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய தாலுகாவில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பணியாற்றிய மற்றும் ஊரக வளர்ச்சி பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் 3 வருடத்திற்கு மேல் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், செங்கம் ஆகிய தாலுகாவை சேர்ந்த 74 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பணியிட மாறுதல் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டு பணியிட மாற்றத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.

Updated On: 30 Jun 2022 6:59 AM GMT

Related News