/* */

திருவண்ணாமலையில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றுவது குறித்து ஆலோசனை

திருவண்ணாமலையில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றுவது குறித்து ஆலோசனை
X

திருவண்ணாமலையில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றுவது  குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  தலைமையில் நடத்தப்பட்டது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாட்களில் வெளியூர் , வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் லட்ச கணக்கில் வந்து கிரிவலம் சுற்றியும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தும் செல்கின்றனர்.

திருவண்ணாமலை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்கள், விளம்பர பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் வைப்பதால் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

திருவண்ணாமலை நகர் பகுதிகளில் கட்சி திருமணத்திற்கும் , உயிரிழப்பு, காதணி விழா பேனர்கள் மற்றும் பல சுவர்களில் சுவரொட்டிகளும் ஒட்டி நகர் பகுதியை அசுத்தமாக்கி உள்ளனர். மேலும், வைக்கப்பட்டுள்ள பேனர்கள் திருவண்ணாமலை நகர் பகுதியில் வரக்கூடிய பொதுமக்கள் மீது விழுந்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வகையில் உள்ளது.

பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதால் நகரின் அழகு தன்மை பாதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் பேனர், போஸ்டர், விளம்பர பதாகைகள், உள்ளிட்டவைகளை வரன்முறைப்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேனர் வைப்பதற்கான வரன்முறை குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் அனுமதியின்றி பேனர் வைத்து அதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் உயிர் சேதம் உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகளால் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் கூண்டோடு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இடமாற்றமும் செய்யப்படுவார்கள். நடைபாதைகளை ஆக்கிரமித்து டிபன் கடை உள்ளிட்ட கடைகள் மீண்டும் அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியின் நிலை, மோசமாக இருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். அப்படியிருந்தும் அகற்றப்படவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுவரொட்டி, டிஜிட்டல் பேனர்கள் ,ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கடுமையாக உத்தரவிட்டார்.

கிரிவல பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகள் அதிகளவில் குவியும் வரை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். கிரிவல பாதையில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி,திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி,. திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் முருகேசன், ஊராட்சி உதவி இயக்குனர் சரண்யா தேவி, செய்யாறு ஊராட்சி உதவி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ,அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2022 1:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  2. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  3. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  5. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  6. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  7. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  8. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  9. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  10. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை