Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை: உழவர் சந்தைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் இன்று முதல் அரசின் வழிமுறைகளின்படி திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருவண்ணாமலையில் உள்ள உழவர் சந்தையில், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தடுப்பூசி, போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அத்துடன், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் உழவர் சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது இதனை தினமும் கடைபிடிக்குமாறு நகராட்சி ஊழியர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.