/* */

படைவீரர் கொடி நாள் விழாவில் கலந்து கொள்ள முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலையில் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் படைவீரர் கொடி நாள் விழாவில் கலந்துகொள்ள முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு

HIGHLIGHTS

படைவீரர் கொடி நாள் விழாவில் கலந்து கொள்ள முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
X

கொடிநாள் விழா (மாதிரி படம் )

திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது..

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு முன்னாள் படைவீரர் கொடி நாள் விழாவையொட்டி உண்டியல் வசூல் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து நடைபெறுகிறது.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Dec 2021 1:44 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்