/* */

கிரிவலப்பாதை குளத்தில் மிதந்த வங்கி மேலாளர் சடலம்: போலீசார் விசாரணை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சிம்மகுளத் தீர்த்தத்தில் வங்கி மேலாளர் சடலமாக மீட்பு

HIGHLIGHTS

கிரிவலப்பாதை குளத்தில் மிதந்த வங்கி மேலாளர் சடலம்: போலீசார் விசாரணை
X

 நீரில் மிதந்த  சடலத்தை கரைக்கு கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சிம்மகுளத் தீர்த்தத்தில் இன்று அதிகாலை வயது 50 மதிக்கத்தக்க நபர் உடல் ஒன்று நீரில் மிதந்து நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து, அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மிதந்த கிடந்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது இறந்த நபர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் திருவண்ணாமலை நகர கூட்டுறவு வங்கி மேலாளர் சத்திய நாராயண மூர்த்தி என்பது தெரியவந்தது. இவருக்கு புனிதா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் சத்தியமூர்த்தியின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்த்து கதறி அழுதனர். அப்போது புனிதா திடீரென மயங்கி விழுந்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்தியமூர்த்தி இன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2022 1:42 PM GMT

Related News