Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் 2021 தீபத்திருவிற்கான பந்தகால் நடும் விழா இன்று அதிகாலை இராஜ கோபுரம் முன் நடைபெற்றது. முன்னதாக திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் அருள்மிகு சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.
திருக்கோயில் இணை ஆணையர் பந்தகால் எடுத்து தர பிச்சகர்கள் விஜயகுமார், ரகு பெற்று சுமந்து வர மகாரதங்களுக்கு தீபாரதனைக்கு பின் பந்தகால் நடப்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 19-ந் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.