Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதல் பேருந்துகள் இயக்கம்
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து அதிகாரி கூறினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 125 நகரப் பேருந்துகள் 356 வெளியூர் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களின் கூட்டத்தைப் பொறுத்து மேலும் அதிகரிக்கப்படும் என திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து அதிகாரி கூறினார்.
மேலும் கூறுகையில், அனைத்து பேருந்துகளும் தக்க பராமரிப்பு செய்து தயார் நிலையில் உள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடு விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா, என பரிசோதிக்க பல குழுக்களாக செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.