Begin typing your search above and press return to search.
தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பயன்படுத்திய 2 பேருந்துகளுக்கு ரூ.10,000 அபராதம்
திருவண்ணாமலையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்திய 2 தனியார் பேருந்துகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.
HIGHLIGHTS
தமிழகத்தில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டறிந்து அகற்றி வருகின்றனர்.
இன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கை நடத்தினர் அப்போது அவ்வழியாக வந்த இரண்டு தனியார் பஸ்களில் தடை செய்யப்பட்ட, அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தது. இரண்டு பஸ்களிலும் 3 ஹாரன்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். 2 பஸ்களும் தலா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.