Begin typing your search above and press return to search.
வேளாண் சட்டத்தை எதிர்த்து வாகன பேரணி
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவண்ணாமலையில் எஸ்டிபிஐ கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் எஸ்டிபிஐ சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதாக மத்திய அரசை கண்டித்தும் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இன்று திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து அண்ணாசிலை வரை எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா தலைமையில் இருசக்கர வாகன பேரணியாக கிளம்பி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சாலையை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணா சிலை முன்பு வேளாண் சட்டத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.