/* */

பராமரிப்பின்றி உயிரிழந்த திருவண்ணாமலை கோவில் பசுமாடு

அண்ணாமலையார் கோவில் கோசாலையில், பசுமாடு ஒன்று பராமரிப்பின்றி உயிரிழந்துள்ளது. பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

HIGHLIGHTS

பராமரிப்பின்றி உயிரிழந்த திருவண்ணாமலை கோவில் பசுமாடு
X

அண்ணாமலையார் கோவிலில் பராமரிப்பின்றி இறந்த பசு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக, ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகளை தானமாக கொடுக்கின்றனர். அனைத்து பசுக்களையும் பராமரிக்க முடியாததால், குறைந்தளவு பசுக்களை மட்டும் வைத்து கொண்டு, மீதமுள்ள பசுக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு கடந்த மாதம், 18 பசுக்கள் வழங்கிய நிலையில், தற்போது, 35 பசுக்கள் உள்ளன. இவற்றின் பராமரிப்புக்காக மாதந்தோறும், ஒரு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இணை ஆணையர் அசோக்குமார், கூடுதல் பொறுப்பாக திருவண்ணாமலை கோவில் நிர்வாக பணியை, கடந்த இரண்டு மாதங்களாக கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 15 மாதங்களுக்கு முன் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் ஒரு பசுவின் கால் முறிந்தது.

இவற்றை கவனித்து சிகிச்சை அளிக்காமல் விட்டதால், காலில் புழு வந்து எழுந்து நிற்கமுடியாமல் படுத்த படுக்கையாக கிடந்த பசு, கடந்த, 22ல், உயிரிழந்தது. இதை கோவில் நிர்வாகம் மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டது. தற்போது, இறந்த பசுவின் போட்டோவை, கோவில் ஊழியர்களே எடுத்து சமூக வலைதளங்களில், நேற்று பரவவிட்டதால், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 27 Sep 2021 1:36 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்