/* */

போளூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய கொள்ளையன் கைது

போளூர் அருகே 5 இருசக்கர வாகனங்களை திருடி பதுக்கி வைத்திருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

போளூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய கொள்ளையன் கைது
X

5 இருசக்கர வாகனங்களை திருடிய கொள்ளையன் தமிழ்ச்செல்வன்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வசூர் கூட்டு சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், குடியாத்தம் காளப்புதூர் பகுதியை சேர்ந்த ராஜாராம் மகன் தமிழ்ச்செல்வன் (வயது39) என்பது தெரியவந்தது.

தமிழ்ச்செல்வன் பால் வண்டி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் போளூர் பகுதியில் 2, திருவண்ணாமலை பகுதியில். 1, காஞ்சிபுரம் பகுதியில் 1, சென்னை அம்பத்தூர் பகுதியில் 1 என்று மொத்தம் 5 இருசக்கர வாகனங்களை திருடியது தெரிந்தது. பின்னர் அவர் பதுக்கி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 March 2022 6:24 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  3. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  5. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்