Begin typing your search above and press return to search.
பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
போளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
போளூர் அடுத்த 11வது வார்டு தானே பெருமாள் தெருவில் உள்ள பொது குழாய் தண்ணீர் தொட்டி தொடர்பைத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கேட்டபோது இன்னும் 2 நாட்களில் சரி செய்து விடுகிறோம் என்று பேரூராட்சி செயல் அலுவலர் கூறியுள்ளார்.
ஆனால் 15 நாட்கள் ஆகியும் அந்த தெருவில் குடிநீர் இணைப்பு பொதுக்குழாயை சரிசெய்யவில்லை. இதனால் 50 மேற்பட்ட பொதுமக்கள் காலி குடத்துடன் பேரூராட்சி அலுவலகம் முன் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் நிலையம் சென்று புகார் மனு ஒன்றை பொதுமக்கள் சார்பாக அளித்தனர்.