/* */

சுகாதார நிலையமா , மாட்டுத் தொழுவமா மக்கள் குழப்பம்

போளூர் அருகே துணை சுகாதார நிலையம், மாட்டு தொழுவமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்

HIGHLIGHTS

சுகாதார நிலையமா , மாட்டுத் தொழுவமா மக்கள் குழப்பம்
X

சுகாதாரம் நிலையம் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு மாம்பட்டு, மேற்குகொல்லைமேடு, எழுவாம்பாடி, ஜடதாரிகுப்பம், எடப்பிறை என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், சுகாதார நிலையம் எதிரே மாடுகளை கட்டி வைத்து மாட்டுத் தொழுவமாக மாற்றியுள்ளனா். மேலும், மாட்டுச் சாணத்தை அருகிலேயே கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதோடு, ஈ, கொசு உற்பத்தியாகி சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

இது தவிர டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா என பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் போது அச்சத்துடனே செல்கின்றனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து துணை சுகாதார நிலையத்தில் தொடர்பு கொண்ட போது வட்டார தலைமை மருத்துவரிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

வந்தவாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 பேர் அனுமதி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் வந்தவாசி அடுத்த சென்னாவரம், நல்லூர், வல்லம், நெல்லியாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 4 பேர் டெங்கு பாதிப்பால் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் உயர் சிகிச்சைக்காக சென்று விட்டனர். ஒருவர் சிகிச்சை முடிந்து நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மற்ற ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 16 Sep 2023 2:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’