/* */

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

சேத்துப்பட்டு அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு
X

பைல்படம்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த நரியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 41). விவசாயியான அவர் தனது மோட்டார் சைக்கிளில் கடுகனூர் கிராமத்துக்கு சென்று விட்டு, அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கடுகனூர் கிராமத்தில் சாலையில் ஒரு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அந்த டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது, டிராக்டரின் பின்பக்கம் அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே விழுந்தார். அதில் பலத்த காயம் அடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் பெரணமல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான சேட்டுவுக்கு பாரதி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Updated On: 18 Jun 2022 1:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    பர்கூர் அடந்த வனப்பகுதியில் ஆம்புலன்சிலேயே பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி