/* */

வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு
X

மாதிரி படம் 

10 மற்றும் 12 வகுப்புகளின் திருப்புதல் தேர்வுக்கான, 10 வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகின. இதுபற்றி அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் பொன் குமார், திருவண்ணாமலையில் நேரடியாக விசாரணை நடத்தினார்.

விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 பள்ளிகள் வினாத்தாள்களை கசியவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி விளக்கம் கேட்டு அந்தப் பள்ளிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.

திருப்புதல் தேர்வு கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக போளூர் கல்வி மாவட்ட அதிகாரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் போளூர் அக்ஸிலியம் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், கணித ஆசிரியர், அலுவலகப் பணியாளர் மீது போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 17 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...