/* */

5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திட அனைத்துத்துறையின் ஒருங்கிணைப்புடன் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

5ம் கட்ட தடுப்பூசி முகாம் 1,017 இடங்களில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய சிறப்பு முகாம் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து 5-வது வாரமாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1,075 இடங்களில கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 57 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். 18 வயதிற்கு மேல் தகுதியுடையவர்கள் முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த தடுப்பூசி முகாம்களில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 20 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Oct 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு