/* */

திருவண்ணாமலை: அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருவண்ணாமலை அருகே முன்னாள் மாணவர்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி கலந்துரையாடினர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
X

திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ராஜன்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2012-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்த முன்னாள் மாணவர்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி கலந்துரையாடினர்.

முன்னாள் மாணவர்களில் பலரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில் தாங்கள் படித்த போது பணியாற்றிய முன்னாள் தலைமை ஆசிரியர் சம்பந்தம் மற்றும் முன்னாள், இன்னாள் வகுப்பு ஆசிரியர்கள் 15 பேருக்கு சால்வை அணிவித்து கவுரவித்து, பாராட்டி பேசினர்.

அப்போது பள்ளிக்கு தேவையான குடிநீர் குழாய் அமைத்துத் தருதல், ஆசிரியர்களுக்கு நாற்காலிகளை வாங்கி தருவதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் முன்னாள் மாணவ-மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். அப்போது அனைவரும் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு கலந்துரையாடினர்.

Updated On: 18 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!