/* */

எங்கப்பா சாவியை காணோம்? வேட்பாளர் பிரநிதிகள் புலம்பல்

திருவண்ணாமலையில் தபால் வாக்கு பதிவுக்கு வாக்குப்பெட்டியின் சாவி வராததால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

HIGHLIGHTS

எங்கப்பா சாவியை காணோம்?  வேட்பாளர் பிரநிதிகள் புலம்பல்
X

வந்தவாசி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாக்குப் பதிவு மையத்தில் தபால் ஓட்டுப்போட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. அதையொட்டி வாக்குப் பெட்டியை சரிபார்க்க அந்தந்த கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வந்தனர். ஆனால் வாக்குப்பெட்டியை திறந்து காட்ட சாவி வந்து சேரவில்லை. வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வாக்குப்பதிவு அலுவலர்களிடம் சாவி தாமதமானதற்கு காரணம் கேட்டனர்.

அப்போது வாக்களிக்க வந்த காவல் துறையினர் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், காவல் துறையினர் தபால் ஓட்டுப்போட தாமதமானது. அப்போது, தாலுகா அலுவலக பணியாளர் சாவிைய கொண்டு வந்தார். வாக்குப்பெட்டி திறந்து காட்டப்பட்டு பின்னர் சீலிடப்பட்டது. அதன் பின், தபால் வாக்குப் பதிவு நடந்தது. இதையடுத்து காவல் துறையினர் வாக்கினை பதிவு செய்துவிட்டு சென்றனர்.

Updated On: 2 April 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்