/* */

இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
X

ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 3 நாள் பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த 2 அடுக்கு அமைப்பு கொண்ட குழு கூட்டம் வட்டார கல்வி அலுவலர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 6 வயது முதல் 18 வயதுடைய அனைத்து பள்ளி செல்லா மாணவர்களை 100சதவீதம் பள்ளியில் சேர்ப்பது, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இதில் திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் வந்து கூட்டத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், பேரூராட்சி தலைவர் சரவணன், திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 3 நாள் பயிற்சி வகுப்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் கீழ்பென்னாத்தூா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பின் 2-ஆம் நாளான திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜா வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தத் திட்டமானது கடந்த ஆண்டு வரை 3-ஆம் வகுப்பு வரை செயல்படுத்தபட்டு வந்தது. தற்போது, வரும் கல்வியாண்டு முதல் 4 மற்றும் 5-ஆம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

படைப்பாற்றல், அறிவியல் செயல்பாடுகள், வரலாறு களங்கள், வாழ்க்கையோடு தொடா்புடைய கணக்குகளை பயன்படுத்தும் முறை, ஏன் எதற்கு என்ற கருத்துக்கேற்ப கேள்வி பயன்படுத்துதல் அடிப்படையில் தற்போது திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில் ஆசிரிய பயிற்றுநா்கள் செண்பகவள்ளி, சரவணராஜ், விஜயலட்சுமி, இசையருவி, சுகந்தி மற்றும் வட்டார அளவில் 199 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Updated On: 5 Jun 2023 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!