திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கி வைத்த அமைச்சர்

வேட்டவலம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் ரூ.24.77 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கிவைத்தாா்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்ருத்  2.0  குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கி வைத்த அமைச்சர்
X

திட்டப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர்

வேட்டவலம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் ரூ.24.77 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கிவைத்தாா்.

கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேட்டவலம் பேரூராட்சியில் ரூ.13 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) அம்சா வரவேற்றார். விழாவின் சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலந்து கொண்டு திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

அப்போது தமிழக அரசின் 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் செய்துள்ள சாதனைகள் குறித்து அவர் பேசியதாவது,

வேட்டவலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாத்தனூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் சுழற்சி முறையில் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வேட்டவலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குடிதண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் ரூ.13 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட வளன் நகர், பாரதிதாசன் தெரு, வடக்குவெளி ஆகிய பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், பெரிய ஏரியில் 5 புதிய திறந்தவெளி கிணறுகள் மற்றும் 15 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் புதிய பைப் லைன் அமைக்கும் குடிநீர் திட்டப் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் 2022-23 ஆம் ஆண்டு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 10.88 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்து மரக்கன்றினை அமைச்சா் எ.வ. வேலு நட்டார்.

விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன் மற்றும் கிரி ,மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, கோட்டாட்சியா் மந்தாகினி, எஸ்.கே.பி கல்விக்குழும தலைவர் கு.கருணாநிதி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சாப்ஜான், புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர், செல்வபாரதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ் தொகுத்து வழங்கினார். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி நன்றி கூறினார்.

Updated On: 31 May 2023 12:59 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா