/* */

பருவதமலை கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கலசபாக்கம் அருகே பருவதமலையில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பருவதமலை கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
X

பருவதமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பருவதமலை உச்சியில் மல்லிகார்ஜுனர் உடனுறை பிரம்மராம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சன்னதி முன்பு பக்தர்களின் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை அடிக்கடி மர்மநபர்கள் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விடுகின்றனர். இதேபோல் நேற்று இரவு கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

தற்போது உடைக்கப்பட்டு உள்ள உண்டியல் வெளியில் தெரியாமல் இருக்க காடா துணி மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருட்டு போயுள்ளது என்பது தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொடர்ந்து இதுபோன்ற சம்பவத்தை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இரவுநேர காவலர் பணிக்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 11 April 2022 1:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  6. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  7. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  10. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...