பருவதமலை கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கலசபாக்கம் அருகே பருவதமலையில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பருவதமலை கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
X

பருவதமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பருவதமலை உச்சியில் மல்லிகார்ஜுனர் உடனுறை பிரம்மராம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சன்னதி முன்பு பக்தர்களின் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை அடிக்கடி மர்மநபர்கள் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விடுகின்றனர். இதேபோல் நேற்று இரவு கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

தற்போது உடைக்கப்பட்டு உள்ள உண்டியல் வெளியில் தெரியாமல் இருக்க காடா துணி மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருட்டு போயுள்ளது என்பது தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொடர்ந்து இதுபோன்ற சம்பவத்தை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இரவுநேர காவலர் பணிக்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 11 April 2022 1:06 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  2. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  3. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  4. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  5. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  6. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  7. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  8. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  9. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  10. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...