கலசபாக்கத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் மேல்மலையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் வன்னியனூர், கீழ் வன்னியனூர் , கர்ணாம்பாடி நவந்தபாளையம் ஆகிய பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கலசப்பாக்கம் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் (பொறுப்பு) வித்யாசாகர் தலைமையில் கோமாரி தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு கூறும்போது, கால்நடைகளில் கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி ஆண்டுக்கு இரு முறை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும். மேலும் தடுப்பூசி செலுத்தாத மாடுகளுக்கு கோமாரி நோய் வந்த பின் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சையை எடுத்துக் கொள்வதன்மூலம் விரைவில் குணப்படுத்த முடியும். அதேபோல் கிருமி நாசினி கொண்டு கொட்டகையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் கோமாரி பாதித்த கால்நடைகளை அப்புறப்படுத்தி மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.என்று கூறினார்.

இம்முகாமில் சுமார் 250 மேற்பட்ட கால்நடைகள் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

மேலும் இம்முகாமில் கலசப்பாக்கம் கால்நடை மருத்துவமனை உதவியாளர் சௌந்தர் , மேலராணி கால்நடை மருந்தக உதவியாளர் லக்ஷ்மி ,மேல் வண்ணியனூர் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் குபேந்திரன் மற்றும் செயற்கை முறை கருவூட்டாலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 2021-11-10T16:47:04+05:30

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
  3. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  5. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  6. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  9. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்