இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்

ஜமுனாமரத்தூர் அருகே நடந்த வாகன விபத்தில் 11 ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்
X

பைல்படம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா பெருமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மகன் அரவிந்த் (வயது 18). இவர், ஜமுனாமரத்தூரில் உள்ள வனத்துறை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது நண்பர்கள் பிரவின்குமார் (15), கிரி (16), நந்தா (18). இவர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆலஞ்சனூர் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவை காண சென்றனர். இதில் பிரவின்குமாரும், கிரியும் 11-ம் வகுப்பும், நந்தா 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மோட்டார் சைக்கிளை அரவிந்த் ஓட்டினார். ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் சென்ற போது திடீரென அரவிந்தின் கட்டுபாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் அங்கிருந்த கருங்கல்லில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Jun 2022 6:47 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்