Begin typing your search above and press return to search.
செய்யாற்றில் தொடரும் மணல் கடத்தல்
கலசப்பாக்கம் பகுதி செய்யாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்தல்
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுக்கா பாடகங்கோயில் பகுதியில் உள்ள செய்யாற்று படுக்கையில் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதாக கலசபாக்கம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செய்யாற்று படுக்கையில் இருந்து மணல் கடத்தி வந்த போது இரண்டு யூனிட் மணலை வாகனத்தோடு கைப்பற்றினர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.