/* */

அண்ணனுக்கு வெச்ச குறி, தம்பி மேல் பாய்ந்த குண்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்

HIGHLIGHTS

அண்ணனுக்கு வெச்ச குறி, தம்பி மேல் பாய்ந்த குண்டு
X

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மகன் கார்த்தி (வயது 20). இவரும், மேல்விளாமூச்சி கிராமத்தை சேர்ந்த காசி என்பவரின் மனைவி சுகுணாவும் தங்களது ஆடுகளை மோட்டூர் காப்புக்காடு வனப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்தனர்.

அப்போது கார்த்தி மீது திடீரென துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஜமுனாமரத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில், கார்த்தியை துப்பாக்கியால் சுட்டது சுகுணாவின் கணவர் காசி என்பது தெரியவந்தது.

மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சுகுணாவுக்கும், கார்த்தியின் அண்ணன் சேட்டுக்கும் பழக்கம் இருந்ததால், சுகுணாவிடம் பேசுவதை நிறுத்துமாறு சேட்.டுவை எச்சரித்துள்ளார். இருப்பினும் சேட்டு தனது நடவடிக்கைகளை மாற்றி கொள்ளாததால் அவரை தீர்த்து கட்ட நினைத்து சுட்டதாகவும், கார்த்தியும், அவரது அண்ணன் சேட்டுவும் ஒரே மாதிரி இருப்பதால் ஆள் மாறிவிட்டதாகவும் காசி தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து போலீசார் காசியை கைது செய்தனர்.

Updated On: 2 Nov 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?