பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த எம்பி வலியுறுத்தல்

கலசப்பாக்கம் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த எம்பி வலியுறுத்தல்
X

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய எம்பி அண்ணாதுரை  

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்

கலசபாக்கம் தாலுகாவில் 37 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கலசப்பாக்கம் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிராண்டா அணையில் தற்போது 19.35 அடி தண்ணீர் உள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு , காலூர் , ஆணை வாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நெற்பயிர் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் . அதேபோல் நெசவு கூடங்களில் தண்ணீர் தேங்குவதால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொடர் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஆர்டிஓ கவிதா , தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஏரி மதகுகள் உடைந்தால் மணல் மூட்டைகளை வைத்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், . ஜேசிபி இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை மூலம் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Updated On: 12 Nov 2021 10:05 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்
  2. செய்யாறு
    காசநோய் இல்லா திருவண்ணாமலை: விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
  6. புதுக்கோட்டை
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
  7. கும்பகோணம்
    சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
  8. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  9. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை