Begin typing your search above and press return to search.
ஜவ்வாதுமலை பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் சேவை துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூர், பகுதியில் இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஜமுனாமரத்தூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜவ்வாதுமலை மக்களுக்காக மக்களைத் தேடி மருத்துவம் சேவையை துவக்கி வைத்து மற்றும் அதற்கான வாகனத்தையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஜவ்வாது மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ப.கேசவன் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் ரமேஷ். ஜமுனாமரத்தூர் வட்டார மருத்துவர் ராமநாதன். சுகாதார ஆய்வாளர் தனசேகரன். மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.