/* */

கலசபாக்கம்: ஹாலோ பிரிக்ஸ் கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கலசபாக்கம் அருகே ‘ஹாலோ பிரிக்ஸ்’ கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

கலசபாக்கம்: ஹாலோ பிரிக்ஸ் கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் ஹாலோ பிரிக்ஸ் கல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் நடத்தி வருகிறார். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவநாராயணன்மாஹி (வயது 50), சுரேஷா (30), தசரத் (20), அகிலேஷ் (23), ஆகிய 4 பேர் தொழிலாளிகளாக பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் ஹாலோ பிரிக்ஸ் கற்களை டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹாலோ பிரிக்ஸ் கற்கள் டிராக்டரில் இருந்து சரிந்து கீழே விழுந்தது. இதில் தேவநாராயணன்மாஹி, சுரேஷா, தசரத் ஆகிய 3 பேர் சிக்கி படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தேவநாராயணன்மாஹி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 July 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?