கலசபாக்கம்: ஹாலோ பிரிக்ஸ் கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கலசபாக்கம் அருகே ‘ஹாலோ பிரிக்ஸ்’ கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலசபாக்கம்: ஹாலோ பிரிக்ஸ் கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் ஹாலோ பிரிக்ஸ் கல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் நடத்தி வருகிறார். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவநாராயணன்மாஹி (வயது 50), சுரேஷா (30), தசரத் (20), அகிலேஷ் (23), ஆகிய 4 பேர் தொழிலாளிகளாக பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் ஹாலோ பிரிக்ஸ் கற்களை டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹாலோ பிரிக்ஸ் கற்கள் டிராக்டரில் இருந்து சரிந்து கீழே விழுந்தது. இதில் தேவநாராயணன்மாஹி, சுரேஷா, தசரத் ஆகிய 3 பேர் சிக்கி படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தேவநாராயணன்மாஹி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 July 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  3. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  4. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  5. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  6. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  7. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  9. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  10. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்