/* */

கலசபாக்கம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா

Tiruvannamalai News -கலசபாக்கம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 82 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

HIGHLIGHTS

கலசபாக்கம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா
X

ஜமாபந்தி நிறைவு விழாவில் கோட்டாட்சியர் உரையாற்றினார்.

Tiruvannamalai News - கலசபாக்கம் தாலுகாவில் 3 நாட்கள் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 940 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 82 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 858 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலசபாக்கம் எம்.எல்.ஏ தி.சரவணன்., ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டு 82 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் கலசபாக்கம் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டு பேசுகையில், கலசபாக்கம் ஒன்றியத்தில் இந்த ஆண்டு அளவுக்கு அதிகமான மழை பொய்ததின் காரணமாக நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். யூரியா தட்டுப்பாடு தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதில் தாசில்தார் தட்சிணாமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மலர்கொடி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Jun 2022 4:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்