/* */

அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காயும் நிலை: விவசாயிகள் வேதனை

கலசபாக்கம் அருகே ஆலை நிர்வாகம் லாரியை அனுப்பாததால் அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக வயலிலேயே காயும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காயும் நிலை: விவசாயிகள் வேதனை
X

அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக வயலிலேயே காயும் நிலை.

கலசப்பாக்கம் அடுத்த சி.நம்மியந்தல் கிராம பகுதி விவசாயிகளில் பலர் கரும்பு பயிரிட்டு திருப்பத்தூர் அரசு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நன்கு விளைச்சலடைந்த கரும்புகளை சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் அனுமதியின்பேரில் அறுவடை செய்யப்பட்டது. ஆனால் 4 நாட்களாகியும் லாரி வராததால் அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காய்ந்து வருகின்றன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதன்பின்னர் 12 மாதங்கள் கண் விழித்து காப்பாற்றி வெட்டும்போது ஒரு டன் கூலியாக ரூ.900மும், தோட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றுவதற்கு கூலியாக ரூ.400ம் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் ஏக்கருக்கு 60 டன் வர வேண்டிய நிலையில் 30 டன் மட்டுமே கரும்பு மகசூல் கிடைக்கிறது. அதிலாவது ஏதாவது கிடைக்கும் என நாங்கள் பயிரிட்ட கரும்பை ஆலைக்கு அனுப்பி வைக்கலாம் என்று இருந்தால் அறுவடை செய்தபின் ஆலை நிர்வாகம் லாரியை அனுப்பவில்லை.

ஆலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் சரி செய்தபின்னரே கரும்புகளை எடுத்து செல்ல முடியும் என கூறுகின்றனர். வெட்டிய கூலி கூட கிடைக்காது இதனால் அறுவடை செய்த கரும்புகள் அனைத்தும் தக்கைபோல் காய்கிறது. இதனை ஏற்றி அனுப்பினால் வெட்டிய கூலி கூட நிற்காது.

மேலும் ஆலை ரிப்பேர் என்றால் கரும்பு வெட்டுவதை களப்பணியாளர் நிறுத்த சொல்ல வேண்டும். எனவே ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு எடைக்குறைவால் ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் தர வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் விவசாயத்திற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்காமல் கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது. இந்த பிரச்சனையை நாங்கள் எங்கேபோய் சொல்வது? ஒரு விவசாயியின் கரும்பு 4 நாட்களாக தோட்டத்திலும், ரோடு ஓரத்திலும் கேட்பாரற்று கிடந்தால் இதற்கு காவல் காப்பது யார்? இங்கு எனது கரும்பு மட்டுமல்லாமல் சுற்றிலும் உள்ள பல ஏக்கர் விவசாயிகளின் கரும்பின் நிலையும் இதே நிலைதான் உள்ளது.

இதனால் கரும்பு பயிர் செய்வதை விட்டுவிடலாம் என்ற மனவேதனையுடன் கூறினார்.

Updated On: 16 Jan 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  3. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  4. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  5. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  6. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  9. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்