/* */

பீமன் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது

HIGHLIGHTS

பீமன் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
X

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அருவி அருகே செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கபட்டிருப்பதாக வன அலுவலர் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களாக போளூரில் அதிக அளவு மழை பதிவாகி வருகிறது . கடந்த சில நாட்களாக ஜவ்வாது மலையில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜவ்வாது மலையில் பல்வேறு காட்டாறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததன் காரணமாக காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தடுப்பு கம்பிகளை தாண்டி வெள்ளம் வருவதால் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வரும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து வன அலுவலர் குணசேகரன் கூறுகையில் பீமன் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அருவி பகுதியில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Updated On: 28 Sep 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  6. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  7. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  8. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  9. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  10. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...