/* */

விதிமீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

கலசப்பாக்கம் அருகே, கொரோனா கட்டுப்பாட்டை மீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.

HIGHLIGHTS

விதிமீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
X

விதிமீறி நடைபெற்ற காளை விடும் விழா 

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளூர், மேல்சோழங்குப்பம், கடலாடி, கீழ்பாலூர் ஆகிய 4 கிராமங்களில் காளை விடும் விழா நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்பதால் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தடையை மீறி போலீசாரின் அனுமதி பெறாமல் காளை விடும் விழா நடத்திய 4 கிராமத்தில் உள்ள விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடைத்துறை டாக்டர் வித்யாசாகர் கடலாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Jan 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு