/* */

காளை விடும் விழா; வேடிக்கை பார்த்த தொழிலாளி மாடு முட்டி பலி

கலசப்பாக்கம் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

காளை விடும் விழா; வேடிக்கை பார்த்த தொழிலாளி மாடு முட்டி பலி
X

மாடு முட்டி தொழிலாளி பலி (கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், கீழ்பாலூர், கடலாடி உள்பட பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது

காலை விடும் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து போலீஸ் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில், கீழ்பாலூர் கிராமத்தில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கலசபாக்கம் அருகே குப்பம் கிராமம் பூங்காவனத்தம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 50), கூலித் தொழிலாளி. இவர் கீழ்பாலூர் கிராமத்தில் காளை விடும் திருவிழாவை பார்க்க செல்வதாக மனைவி குமாரியிடம் கூறிவிட்டு வந்துள்ளார்.

காளை விடும் விழாவை பார்த்துக்கொண்டு, ஓரமாக நின்றிருந்த கார்த்தி மீது திடீரென காளை மாடு ஒன்று முட்டி மோதி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கார்த்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Updated On: 18 Jan 2023 1:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை