/* */

அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த மக்கள் நல பணியாளர் உயிரிழப்பு

கலசபாக்கம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மிதித்த மக்கள் நல பணியாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த  மக்கள் நல பணியாளர்  உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காம்பட்டு பல்ல தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 52), இவர் மக்கள் நல பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று இவர் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது நிலத்தில் மின்சார கம்பத்தில் இருந்து ஒரு கம்பி அறுந்து நிலத்தின் வரப்பின் மீது விழுந்து கிடந்தன. அந்த மின் கம்பியில் மின்சாரம் சென்று கொண்டிருந்ததை பார்க்காமல் சக்கரவர்த்தி மின்கம்பியை மிதித்துள்ளார்.

உடனடியாக மின்சாரம் தாக்கி சக்கரவர்த்தி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து சக்கரவர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Aug 2022 7:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி