பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 4 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 4 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 4 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தச்சம்பாடி கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி, என்பவர் 3 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் S.பிரபாவதி (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஆரணி வட்டம், வடுகசாத்து கிராமத்தை சேர்ந்த அருண்குமார், என்பவர் ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ஆரணி கிராமிய காவல் ஆய்வாளர் P.புகழ் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் கார்கோணம் கிராமம், பெரிய தெருவை சேர்ந்த பச்சையப்பன், என்பவர் கள்ளச்சாராய விற்பனiயில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கலசப்பாக்கம் காவல் ஆய்வாளர் G.ஜனார்த்தனன் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் திருவண்ணாமலை நகரம், மாந்தோப்பு, ராமகிருஷ்ணா ஓட்டல் எதிரில் வசித்து வரும் அப்பு @ மணிகண்டன் வ/27, த/பெ உதயகுமார் என்பவர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ஆரணி நகர காவல் ஆய்வாளர் P.கோகுல்ராஜன் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார், அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், அவர்கள், மேற்கண்ட 4 நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 9 April 2022 3:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  2. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  5. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  6. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  7. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  8. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  9. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  10. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...